கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடந்த மார்ச் 26ம் தேதி தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில், சங்க உறுப்பினர்களான கமல்குமார், சீனிவாசன் உள்பட 8 தயாரிப்பாளர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் நடத்தும் அதிகாரியாக தயாரிப்பாளர் சங்கம் நியமித்திருந்த ஓய்வுபெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமனுடன் ஓய்வு பெற்ற நீதிபதி வி.பாரதிதாசனையும் கூடுதல் அதிகாரியாக நியமித்து உத்தரவிட்டது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் “நிர்வாகிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 30ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 1ம் தேதி நடைபெற உள்ளது” என்று தெரிவித்தார்.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் “தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறும் வகையில் அனைத்து நடைமுறைகளையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும். தேர்தல் நடைபெறும் அன்றே வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும். வாக்குஎண்ணிக்கை நாளன்று தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்” என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து ஏப்ரல் 30ம் தேதி தேர்தல் நடத்த அனுமதி அளித்த நீதிமன்றம், மனுதாரர்களுக்கு குறைகள் இருந்தால் அதனை தேர்தல் அதிகாரியிடம் தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியதுடன். தேர்தல் முடிந்த உடன் அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.