புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஏ.ஆர்.முருகதாஸ். இதுவரை பத்துக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். அதில் 'தீனா, ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி, சர்க்கார்' ஆகிய வெற்றிப் படங்களும் அடக்கம். அதே சமயம் 'ஸ்பைடர், தர்பார்' என இரண்டு தோல்விப் படங்களையும் கொடுத்துள்ளார். இவற்றில் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' படத்தின் தோல்வி யாரும் எதிர்பாராத ஒன்று.
கடந்த மூன்று வருடங்களாக எந்த ஒரு படத்தையும் இயக்காத ஏஆர் முருகதாஸ் சமீபத்திய பேட்டி ஒன்றில், 'தர்பார்' படத்தின் தோல்விக்கு என்ன காரணம் என்பதை மனம் திறந்து கூறியுள்ளார். “ரஜினிகாந்த் சாரை இயக்கும் வாய்ப்பு எனக்கு பிப்ரவரி மாதம் கிடைக்கிறது. ஜுன் மாதம் மும்பையில் மழைக்காலம். அதற்குள் படத்தை முடிக்க வேண்டும், ஆகஸ்ட் மாதம் அவர் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்கிறார்கள். நான் ரஜினி சாரின் தீவிர ரசிகன். அந்தப் படத்தை எந்தக் காரணம் கொண்டும் நான் மிஸ் பண்ண விரும்பல.
அன்றைய சூழ்நிலையில் அந்தப் படம்தான் ரஜினி சாரின் கடைசிப் படம் என்று பேசப்பட்டது. அடுத்து அவர் அரசியல் பக்கம் போகப் போகிறார் என்பதே அதற்குக் காரணம். பிப்ரவரியில் வாய்ப்பு கிடைத்து மார்ச் மாதம் ஷுட்டிங் போயி, ஜுனுக்குள் படத்தை முடிக்க வேண்டிய சூழ்நிலை. எப்படியாவது ரஜினி சாரை வச்சி படத்தை ஹிட் கொடுக்கணும்னு நினைச்சேன். ஆனால், சரியான திட்டமிடல் இல்லாம படம் தோல்வியடைஞ்சு போச்சு. ஷுட்டிங் முன்னாடி நமக்கு நிறைய டைம் வேணும். அந்த டைம் லிமிட்டுக்குள்ள படம் பண்ணணும்கறது எனக்கு தோல்வியைத் தந்தது,” என்று சொல்லியிருக்கிறார்.