இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்போது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார். முதலில் இப்படத்தில் சமந்தா நடிப்பதாக இருந்தது. உடல் நலக்குறைவு காரணங்களால் அவர் இத்திரைப்படத்தை விட்டு விலகியுள்ளார்.
ராஷ்மிகா நடிக்கும் இந்த படத்திற்கு ரெயின்போ என தலைப்பு வைத்துள்ளனர். புதுமுக இயக்குனர் சாந்த ரூபன் இந்த படத்தை இயக்குகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் தேவ் மோகன் நடிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். பேண்டஸி கலந்த காதல் திரைப்படமாக உருவாகும் இந்த படத்தின் பூஜை இன்று நடபெற்றது. வரும் ஏப்ரல் 7 முதல் படப்பிடிப்பு துவங்குகிறது.
நடிகை ரஷ்மிகா கூறுகையில், "ஒரு பெண் கதாபாத்திரத்தின் பார்வையில் சொல்லப்படும் கதையில் முதல் முறையாகப் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இந்த கதாபாத்திரத்துக்குத் திரையில் உயிர் கொடுக்க ஆவலாக இருக்கிறேன். உங்களை பொழுதுபோக்கும், ஆச்சரியப்படுத்தும் ஒரு படமாக ரெயின்போ இருக்கும். அந்தப் பெண் கதாபாத்திரத்துடனான ரசிகர்களின் பயணம் உற்சாகமானதாக இருக்கப் போகிறது. அதற்குத் தயாராகுங்கள்" என்று கூறியுள்ளார்.