‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
1985ம் ஆண்டு வெளியான படம் 'சின்ன வீடு'. சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் கோர்வையான, கச்சிதமான திரைக்கதையை தன்னுடைய பாணியில் எழுதி, இயக்கி இருந்தார் கே. பாக்யராஜ்.
பொருந்தாத மனைவியை வெறுத்து இன்னொரு பெண்ணை தேடும் ஒரு ஆணின் கதை இது. கோவலன் கண்ணகி கதையின் உல்டா என்றும் சொல்லலாம். தன்னுடைய வருங்கால மனைவி, அழகுப் பதுமையாக இருக்க வேண்டும் என்கிற கனவுடன் இருக்கும் பாக்யராஜிற்கு குண்டாக இருக்கும் கல்பனாவை திருமணம் செய்து வைத்து விடுவார்கள்.
மனைவியை ஒதுக்கி வைத்து வேண்டா வெறுப்பாக குடும்பம் நடத்தும் பாக்யராஜ், பானு என்கிற ஓர் அழகான பெண்ணின் காதலில் விழுகிறார். இதனால் ஏற்படும் உறவுச்சிக்கல்களும், குழப்பங்களும் இறுதியில் எவ்வாறு தீர்கின்றன என்பதை நிறைய காமெடியும் கொஞ்சம் சென்டிமென்ட்டும் கலந்து சொல்லிய படம்.
கிட்டத்தட்ட இதே மாதிரியான கதையை கொண்ட 'கோபுரங்கள் சாய்வதில்லை' படம் இரு ஆண்டுகளுக்கு முன் வெளியாகி இருந்தது. மனைவியாக வந்த அருக்காணியை (சுஹாசினி) கைவிட்டு மார்டன் பெண்ணான ராதாவோடு மோகன் சுற்றும் கதை.
இந்த படம் மக்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்ததால் 'சின்ன வீ'டு படத்தை இப்போதே ரிலீஸ் செய்தால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று கருதிய பாக்யராஜ் படம் தயாராகி 6 மாதங்களுக்கு பிறகு படத்தை வெளியிட்டார்.