மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பிரபாஸ், கிர்த்தி சனோன், சன்னி சிங், சைப் அலிகான் நடிக்கும் பான் இந்தியா படம் 'ஆதி புரூஷ்'. பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி வரும் இந்தப் படத்தை பூஷண் குமார் தயாரிக்கிறார். ராஜேஷ் நாயர் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். வரும் ஜூன் மாதம் 16ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இதை தொடர்ந்து இதன் புரமோஷன் பணிகளை நாளை முதல் தொடங்குகிறார்கள். இதை முன்னிட்டு தயாரிப்பாளர் பூஷண் குமார் இயக்குநர் ஓம் ராவத் ஆகியோர் ஜம்மு காஷ்மீரில் உள்ள மாதா வைஷ்ணவி தேவியை தரிசித்து பணிகளை தொடங்கி உள்ளனர். வைஷ்ணவி தேவி கோயிலில் நடந்து வரும் சைத்ர நவராத்திரி விழாவில் கலந்து கொண்ட இவர்கள் படத்தின் வெற்றிக்காக சிறப்பு வழிபாடு நடத்தினர்.
”வைஷ்ணவி தேவி எங்கள் குல தெய்வம். எந்த காரியத்தை தொடங்கினாலும் அவளை வணங்கி ஆசீர்வாதம் பெற்றே தொடங்குவோம். ஆதி புருஷ் படத்தின் பணிகளை அப்படியே தொடங்கி உள்ளோம். பெரும் வெற்றியை அவள் எங்களுக்கு தருவாள்” என்கிறார் தயாரிப்பாளர் பூஷண் குமார்.