விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் |
லைகா நிறுவனம் தயாரித்த பொன்னியின் செல்வன் பெரும் வெற்றி பெற்று 500 கோடி வரை வசூலித்தது. தற்போது அதன் 2ம் பாகம் வெளிவர இருக்கிறது. இதுவும் 500 கோடி வரை வசூலிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் உற்சாகத்தில் உள்ள லைக்கா அஜித் படம் உள்ளிட்ட பல படங்களை புதிதாக தயாரிக்கிறது. ஏற்கெனவே பெரிய பட்ஜெட்டில் இந்தியன் 2 படத்தை தயாரித்து வருகிறது.
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியீட்டை முன்னிட்டு லைகா நிறுவனத்தின் சேர்மன் சுபாஷ்கரன் இந்தியா வந்துள்ளார். அவரது முன்னிலையில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு லைகா நிறுவனம் சார்பில் 50 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டது. இதனை தற்போதைய சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி, துணை தலைவர் கதிரேசன், செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.