படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் |
லைகா நிறுவனம் தயாரித்த பொன்னியின் செல்வன் பெரும் வெற்றி பெற்று 500 கோடி வரை வசூலித்தது. தற்போது அதன் 2ம் பாகம் வெளிவர இருக்கிறது. இதுவும் 500 கோடி வரை வசூலிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் உற்சாகத்தில் உள்ள லைக்கா அஜித் படம் உள்ளிட்ட பல படங்களை புதிதாக தயாரிக்கிறது. ஏற்கெனவே பெரிய பட்ஜெட்டில் இந்தியன் 2 படத்தை தயாரித்து வருகிறது.
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியீட்டை முன்னிட்டு லைகா நிறுவனத்தின் சேர்மன் சுபாஷ்கரன் இந்தியா வந்துள்ளார். அவரது முன்னிலையில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு லைகா நிறுவனம் சார்பில் 50 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டது. இதனை தற்போதைய சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி, துணை தலைவர் கதிரேசன், செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.