கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
லைகா நிறுவனம் தயாரித்த பொன்னியின் செல்வன் பெரும் வெற்றி பெற்று 500 கோடி வரை வசூலித்தது. தற்போது அதன் 2ம் பாகம் வெளிவர இருக்கிறது. இதுவும் 500 கோடி வரை வசூலிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் உற்சாகத்தில் உள்ள லைக்கா அஜித் படம் உள்ளிட்ட பல படங்களை புதிதாக தயாரிக்கிறது. ஏற்கெனவே பெரிய பட்ஜெட்டில் இந்தியன் 2 படத்தை தயாரித்து வருகிறது.
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியீட்டை முன்னிட்டு லைகா நிறுவனத்தின் சேர்மன் சுபாஷ்கரன் இந்தியா வந்துள்ளார். அவரது முன்னிலையில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு லைகா நிறுவனம் சார்பில் 50 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டது. இதனை தற்போதைய சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி, துணை தலைவர் கதிரேசன், செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.