மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
கடந்த 2021ல் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி தலைவி என்கிற படம் வெளியானது. இயக்குனர் விஜய் இயக்கியிருந்த இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் நடித்திருந்தார். எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடித்திருந்தார். இந்த படம் உருவாகி வந்த சமயத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் படம் ரிலீஸ் ஆனபோது அந்த எதிர்பார்ப்பை ஈடு செய்ய தவறியதுடன் மிகப்பெரிய நஷ்டத்தையும் சந்தித்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் அந்த படத்தை இந்திய அளவில் விநியோகம் செய்ய உரிமை பெற்ற ஜீ நிறுவனம் அதற்கான முன்தொகையாக 6 கோடி ரூபாயை தயாரிப்பாளர்கள் வசம் செலுத்தி இருந்தனர். படம் எதிர்பார்த்த அளவில் வசூலாகாத நிலையில், கணக்கு வழக்குகளை ஒப்படைத்து தாங்கள் செலுத்திய ஆறு கோடி ரூபாயை திருப்பித் தருமாறு கடந்த ஒன்றரை வருடங்களாக கடிதம் மூலமாகவு,ம் மெயில் மூலமாகவும் சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்டு வந்தனராம். ஆனால் அவர்கள் தரப்பிலிருந்து இதற்கு எந்த பதிலும் வராததால் தற்போது இது தொடர்பாக நீதிமன்றத்தை நாட இருப்பதாக தற்போது ஒரு பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.