இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

கடந்த 2021ல் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி தலைவி என்கிற படம் வெளியானது. இயக்குனர் விஜய் இயக்கியிருந்த இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் நடித்திருந்தார். எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடித்திருந்தார். இந்த படம் உருவாகி வந்த சமயத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் படம் ரிலீஸ் ஆனபோது அந்த எதிர்பார்ப்பை ஈடு செய்ய தவறியதுடன் மிகப்பெரிய நஷ்டத்தையும் சந்தித்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் அந்த படத்தை இந்திய அளவில் விநியோகம் செய்ய உரிமை பெற்ற ஜீ நிறுவனம் அதற்கான முன்தொகையாக 6 கோடி ரூபாயை தயாரிப்பாளர்கள் வசம் செலுத்தி இருந்தனர். படம் எதிர்பார்த்த அளவில் வசூலாகாத நிலையில், கணக்கு வழக்குகளை ஒப்படைத்து தாங்கள் செலுத்திய ஆறு கோடி ரூபாயை திருப்பித் தருமாறு கடந்த ஒன்றரை வருடங்களாக கடிதம் மூலமாகவு,ம் மெயில் மூலமாகவும் சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்டு வந்தனராம். ஆனால் அவர்கள் தரப்பிலிருந்து இதற்கு எந்த பதிலும் வராததால் தற்போது இது தொடர்பாக நீதிமன்றத்தை நாட இருப்பதாக தற்போது ஒரு பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.