இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

நடிகர் தனுஷ் இப்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். பீரியட் படமாக உருவாகும் இந்தப்படம் பிரமாண்டமாய் உருவாகிறது. இதையடுத்து தனது 50-வது படத்தை தனுஷே இயக்கி, நடிக்கவுள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதுதவிர மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இதுதவிர தெலுங்கிலும் இரண்டு படங்களில் அவர் நடிக்க வேண்டி உள்ளது. இதற்கான அறிவிப்பும் ஏற்கனவே வெளியாகின.
இந்நிலையில் மற்றுமொரு புதிய படத்தை ஒப்பந்தம் செய்துள்ளாராம் தனுஷ். இந்த படத்தை சமீபத்தில் வெளியான கட்டா குஸ்தி படத்தின் இயக்குனர் செல்லா அய்யாவு இயக்க உள்ளார். கோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியன் இப்படத்தை தயாரிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.