அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி | உருட்டு உருட்டு : நாகேஷ் பேரன் நாயகனாக நடிக்கும் படம் |
95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கடந்த வாரம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான விருதையும், 'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்' என்ற தமிழ் டாகுமென்டரி படம், சிறந்த டாகுமென்டரி குறும்படத்திற்கான விருதையும் பெற்றது.
ஆஸ்கர் விருது விழா நடைபெற்ற டால்பி அரங்கில் விழா நடந்த போது 'ஆர்ஆர்ஆர்' படத்தின் இயக்குனர் ராஜமவுலியின் குடும்பத்தினர் கடைசி வரிசையில் வெளியே செல்லும் கதவருகில் அமர்ந்திருந்தனர். அது குறித்து சர்ச்சையைக் கிளப்பியிருந்தனர் தெலுங்கு சினிமா ரசிகர்கள். இப்போதுதான் அது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.
விழாவில் 'நாட்டு நாட்டு' பாடலுக்காக விருது வாங்கிய கீரவாணி அவரது மனைவி, பாடலாசிரியர் சந்திரபோஸ் அவரது மனைவி ஆகியோருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாம். ராஜமவுலி அவரது மனைவி, அவரது மகன், மருமகள், ஜுனியர் என்டிஆர் அவரது மனைவி, ராம் சரண் அவரது மனைவி ஆகிய அனைவரும் விழாவில் கலந்து கொள்ள 25 ஆயிரம் யுஎஸ் டாலர் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கித்தான் விழாவில் கலந்து கொண்டார்களாம். 25 ஆயிரம் யுஎஸ் டாலர் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் 20 லட்ச ரூபாய். டிக்கெட்டுக்காக மட்டுமே 'ஆர்ஆர்ஆர்' குழுவினர் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்திருக்கிறார்கள்.