மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
இயக்குனர் பாரதிராஜா தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்தாண்டு தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் அவர் நடிப்பு அதிகம் பேசப்பட்டது. இப்போது தங்கர் பச்சானின் கருமேகங்கள் கலைகின்றன, நித்திலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம், நிர்மல்குமார் இயக்கும் 'நா நா' உட்பட பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இதற்கிடையே அவர் மீண்டும் படம் இயக்க இருக்கிறார். கடைசியாக 'மீண்டும் ஒரு மரியாதை' என்ற படத்தை இயக்கி, நடித்திருந்த பாரதிராஜா, பிறகு நடிப்பில் பிசியானார். இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையை இயக்கி, நடிக்க போகிறார். தேனி பின்னணியில் உருவாகும் இந்தப் படத்திற்கு 'தாய்மெய்' என்று தலைப்பு வைத்துள்ளாராம். இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.