பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது | இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு : பாடகி சுசித்ராவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம் |
கர்ணன் படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், பஹத் பாசில், வடிவேலு என ஒரு கமர்சியல் கூட்டணியை வைத்து மாமன்னன் என்கிற படத்தை இயக்கினார் இயக்குனர் மாரி செல்வராஜ். அந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து கொண்டிருக்கும்போதே சிறிய பட்ஜெட் படமாக வாழை என்கிற படத்தையும் இயக்கி முடித்து விட்டார். இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிராமத்து சிறுவர்களை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படமும் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் இருக்கிறது.
இந்த நிலையில் இந்த படத்திற்கு இசையமைத்து வரும் சந்தோஷ் நாராயணன் படத்தை பார்த்து தான் பிரமித்து போனதாக கூறியுள்ளார். சமீபத்தில் மாரி செல்வராஜின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வாழை படம் பார்த்து அப்படியே ஸ்தம்பித்து விட்டேன். ஒரு லைப் டைம் படம் கொடுத்து விட்டோம் என உங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள். தொடர்ந்து உங்களது மாயாஜாலங்களால் எங்களை மகிழ்வியுங்கள்” என்று கூறியுள்ளார்.
அதேசமயம் இந்த படம் திரையரங்குகளுக்கு வராமல் நேரடியாகவே ஓடிடி தளத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.