லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
1990களில் பிசியாக இருந்தவர் நடிகை நக்மா. தமிழில் காதலன் படத்தில் அறிமுகமாகி அதன்பிறகு பல படங்களில் நடித்தார். இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்தார். தற்போது நடிப்பை விட்டு விலகி இருக்கும் நக்மா காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வருகிறார்.
மும்பையில் வசித்து வரும் நக்மாவுக்கு சமீபத்தில் போனில் ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், இருந்த லிங்கை நடிகை நக்மா கிளிக் செய்த உடன் ஒருவர் அவரை தொடர்பு கொண்டு தன்னை வங்கி அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டார். அந்த நபர், நக்மாவிடம் உங்களது வங்கி கணக்கின் வாடிக்கையாளரின் விவரம் புதுப்பிக்க உதவுவதாக கூறியுள்ளார். உஷாரான நக்மா வங்கி கணக்கு விபரங்களை கொடுக்கவில்லை. என்றாலும் சிறிது நேரத்தில் நக்மாவின் வங்கி கணக்கில் இருந்து 99 ஆயிரத்து 998 ரூபாய் எடுக்கப்பட்டு விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த நக்மா மும்பை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். குறுஞ்செய்தியை கிளிக் செய்து மோசடி பேர்வழிகளின் போனை அட்டர்ன் பண்ணினாலே அவர்களால் வங்கி கணக்க விபரங்களை பெற்று விட முடியும் என்கிறார்கள். இதே போன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை ஸ்வேதா மேனன் பணத்தை இழந்தது குறிப்பிடத்தக்கது.