டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

1990களில் பிசியாக இருந்தவர் நடிகை நக்மா. தமிழில் காதலன் படத்தில் அறிமுகமாகி அதன்பிறகு பல படங்களில் நடித்தார். இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்தார். தற்போது நடிப்பை விட்டு விலகி இருக்கும் நக்மா காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வருகிறார்.
மும்பையில் வசித்து வரும் நக்மாவுக்கு சமீபத்தில் போனில் ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், இருந்த லிங்கை நடிகை நக்மா கிளிக் செய்த உடன் ஒருவர் அவரை தொடர்பு கொண்டு தன்னை வங்கி அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டார். அந்த நபர், நக்மாவிடம் உங்களது வங்கி கணக்கின் வாடிக்கையாளரின் விவரம் புதுப்பிக்க உதவுவதாக கூறியுள்ளார். உஷாரான நக்மா வங்கி கணக்கு விபரங்களை கொடுக்கவில்லை. என்றாலும் சிறிது நேரத்தில் நக்மாவின் வங்கி கணக்கில் இருந்து 99 ஆயிரத்து 998 ரூபாய் எடுக்கப்பட்டு விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த நக்மா மும்பை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். குறுஞ்செய்தியை கிளிக் செய்து மோசடி பேர்வழிகளின் போனை அட்டர்ன் பண்ணினாலே அவர்களால் வங்கி கணக்க விபரங்களை பெற்று விட முடியும் என்கிறார்கள். இதே போன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை ஸ்வேதா மேனன் பணத்தை இழந்தது குறிப்பிடத்தக்கது.




