தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா |
சமீபத்தில் நடிகர் தனுஷ், தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தெலுங்கில் முதன்முறையாக நேரடியாக நடித்த வாத்தி திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியானது. 90களில் இறுதியில் இருந்த கல்வி முறையை மையப்படுத்தி உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்களின் வரவேற்புடன் டீசன்டான வெற்றியையும் பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. அதேசமயம் படத்தில் சொல்லப்பட்டு இருக்கும் கல்வி முறை தமிழக கல்வி முறைக்கு சம்பந்தம் இல்லாமல் இருப்பதாக சில விமர்சனங்களும் எழுந்தன.
இந்த நிலையில் சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் வெங்கி அட்லூரி பேசும்போது, ஒருவேளை நான் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றால் சாதி ரீதியிலான இட ஒதுக்கீடு முறையை மாற்றி பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டை கொண்டு வருவேன் என்று கூறியிருந்தார். தெலுங்கு தேசத்தை விட தமிழகத்தில் இவரது பேச்சு கிட்டத்தட்ட விவாதம் செய்யும் அளவிற்கு சலசலப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக சாதி ரீதியான ஒதுக்கீட்டிற்கு ஆதரவு அளிக்கும் பலரும் இவரது கருத்துக்களை விமர்சனம் செய்தனர்.
மேலும் இட ஒதுக்கீடு என்பது கல்வி அமைச்சரின் துறையில் வராது, அது சமூக நீதி மற்றும் சுற்றுச்சூழல் துறையில் தான் வருகிறது என்று கூறி இயக்குனரின் கருத்துக்களை கிண்டலடித்தும் வந்தனர். இதை தொடர்ந்து தற்போது இந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்து முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தான் எந்த விதமான உள்நோக்கத்துடனும் அப்படி கூறவில்லை என்றும் மாணவர்கள் பெரும்பாலானோர் படிப்பதற்கு அவர்களுடைய பொருளாதார ரீதியான பிரச்னைகள் தடையாக இருக்கின்றன என்பதால் அவர்கள் படிக்க வசதியாக இருக்கும் பொருட்டு பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு தேவை என்றுதான் கூறியதாகவும் தமிழில் அது வேறுமாதிரி புரிந்து கொள்ளப்பட்டு விட்டது என்றும் கூறியுள்ளார் வெங்கி அட்லூரி.