புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளிவந்த தெலுங்குப் படம் பான் இந்தியா படமாக வெளியாகி 1000 கோடிக்கும் அதிகமா வசூலைக் குவித்தது. வெளிநாடுகளிலும் இப்படத்திற்குக் குறிப்பிடும்படியான வசூல் கிடைத்தது.
ஆஸ்கர் விருதுக்காக சிறந்த பாடல் பிரிவில் இப்படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் தேர்வாகியுள்ளது. அதற்கு விருது கிடைக்குமா என்பது இன்னும் இரண்டு வாரத்தில் தெரிந்துவிடும்.
இதனிடையே, அமெரிக்காவில் உள்ள “ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன் கிரியேட்டிவ் ஆர்ட்ஸ் அவார்ட்ஸ்” வழங்கும் திரைப்பட விருதுகளில் 'ஆர்ஆர்ஆர்' படம் நான்கு விருதுகளை வென்றுள்ளது.
சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம், சிறந்த ஆக்ஷன் திரைப்படம், சிறந்த ஸ்டன்ட்ஸ், சிறந்த ஒரிஜனல் பாடல் ஆகிய நான்கு விருதுகளை அள்ளியுள்ளது. அந்த விருதுகளை ராம்சரண், ராஜமவுலி, கீரவாணி உள்ளிட்ட படக்குழுவினர் பெற்றுக் கொண்டார். அடுத்த சில நாட்களில் ‛ஆர்ஆர்ஆர்' குழுவினர் மார்ச் 12ம் தேதி நடைபெற உள்ள ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்க உள்ளனர்.