வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோத், அதன்பின் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். துணிவு படத்திற்கு பின் கமலை வைத்து ஒரு படத்தை வினோத் இயக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. அதோடு தனுஷிற்கும் ஒரு கதை சொல்லி உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தனது அடுத்தப்பட வேலையில் வினோத் இறங்கி உள்ளார்.
சமீபத்தில் நடிகர் கமலை சந்தித்து பேசி உள்ளாராம் வினோத். அப்போது இவர்கள் இணையும் படம் பற்றி விவாதித்தாக தெரிகிறது. அப்போது அதை முழு படமாக்க கமல் சம்மதம் சொல்லிவிட்டாராம். இதையடுத்து இந்த படத்திற்கான திரைக்கதை உள்ளிட்ட முன்கட்ட பணிகளை வினோத் துவங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.