திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. தற்போது தனது மனைவி ஜோதிகா, மற்றும் மகன், மகளுடன் மும்பையில் செட்டிலாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. சென்னை, தி.நகரில் பிரம்மாண்ட வீடு ஒன்றை சில வருடங்களுக்கு முன்பு கட்டி அங்குதான் பெற்றோர், தம்பி கார்த்தி ஆகியோருடன் கூட்டுக் குடும்பமாக இருந்து வந்தார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் சூர்யா மட்டும் மும்பையில் தனிக்குட்டித்தனம் சென்றுவிட்டார் என்கிறார்கள். கடந்த வாரம் கூட அந்த மும்பை வீட்டிலிருந்து, ஜோதிகா சில புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கரை சூர்யா சந்தித்துள்ளார். அவருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “மரியாதை மற்றும் அன்பு” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சூர்யா தற்போது அவரது 42வது படத்தில் நடித்து வருகிறார். சென்னையில் நடைபெறும் படப்பிடிப்புக்கும் மும்பை வீட்டிலிருந்து வந்து போகிறார் என கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.