300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
'பிரேமம்' மலையாளப் படத்தின் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். அதன் பிறகு தமிழில் 'கொடி, தள்ளிப் போகாதே' ஆகிய படங்களில் மட்டும் நடித்துளளார். தற்போது தமிழில் 'சைரன்' படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அனுபமா அழகான நடிகை மட்டுமல்ல, அழகான குரலுக்கும் சொந்தக்காரர் என்பது இப்போதுதான் தெரிகிறது. நேற்று அவருடைய இன்ஸ்டாகிராம் தளத்தில் ஒரு மேக்கப் அறையில் அவர் தலையில் மல்லிப்பூவை அணிந்து கொண்டபடியே 'வெந்து தணிந்தது காடு' படத்தின் 'மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே' பாடலைப் பாடிய வீடியோவைப் பகிர்ந்து, “தமிழ்ப் பாடலை மலையாளத்தில் பாடுவது எனது புது திறமை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அப்படத்தின் கதாநாயகியாக சித்தி இட்னானியும் 'நைஸ் சாங்' என பாராட்டு தெரிவித்துள்ளார். ரசிகர்கள் பலரும் அவரது குரலின் இனிமையைப் பாராட்டியுள்ளனர். ஒருவர் நடிப்பதை விட்டுவிட்டு பாட முயற்சி செய்யுங்கள் என்றும் கமெண்ட் செய்துள்ளார். அந்தப் பதிவுக்கு மட்டும் ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளன.