ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
'பிரேமம்' மலையாளப் படத்தின் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். அதன் பிறகு தமிழில் 'கொடி, தள்ளிப் போகாதே' ஆகிய படங்களில் மட்டும் நடித்துளளார். தற்போது தமிழில் 'சைரன்' படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அனுபமா அழகான நடிகை மட்டுமல்ல, அழகான குரலுக்கும் சொந்தக்காரர் என்பது இப்போதுதான் தெரிகிறது. நேற்று அவருடைய இன்ஸ்டாகிராம் தளத்தில் ஒரு மேக்கப் அறையில் அவர் தலையில் மல்லிப்பூவை அணிந்து கொண்டபடியே 'வெந்து தணிந்தது காடு' படத்தின் 'மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே' பாடலைப் பாடிய வீடியோவைப் பகிர்ந்து, “தமிழ்ப் பாடலை மலையாளத்தில் பாடுவது எனது புது திறமை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அப்படத்தின் கதாநாயகியாக சித்தி இட்னானியும் 'நைஸ் சாங்' என பாராட்டு தெரிவித்துள்ளார். ரசிகர்கள் பலரும் அவரது குரலின் இனிமையைப் பாராட்டியுள்ளனர். ஒருவர் நடிப்பதை விட்டுவிட்டு பாட முயற்சி செய்யுங்கள் என்றும் கமெண்ட் செய்துள்ளார். அந்தப் பதிவுக்கு மட்டும் ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளன.