மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை மணிரத்னம் திரைப்படமாக இயக்கி வெளியிட்டுள்ளார். இதன் முதல் பாகம் வெளியாகி 500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இரண்டாம் பாகம் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் சார்பில் கல்கியின் அறக்கட்டளைக்கு மணிரத்னம் ஒரு கோடி ரூபாய் வழங்கினார்.
இந்த நிலையில். “கல்கி : பொன்னியின் செல்வர்”என்ற தலைப்பில் கல்கியின் வாழ்க்கை வரலாற்றை பத்திரிகையாளர் எஸ்.சந்திர மௌலி எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை இயக்குனர் மணிரத்னம் வெளியிட்டார். கல்கியின் பேத்திகளான சீதா ரவி, லட்சுமி நடராஜன் பெற்றுக் கொண்டனர்.
இது குறித்து மணிரத்னம் கூறும்போது “அமரர் கல்கியின் எழுத்துக்கள் தலைமுறைகள் தாண்டி ரசிக்கப்படுவது அவரது எழுத்தின் ஈர்ப்புக்கு சாட்சி. பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் பெரும் வரவேற்பினைப் பெற்று, இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவரது வாழ்க்கை வரலாறு வெளியிடப்படுவது மிகவும் பொருத்தமானது”என்றார்.