இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
மாஸ்டர் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் புரமோ வெளியிடப்பட்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக 14 ஆண்டுகளுக்குப் பிறகு த்ரிஷா இணைந்துள்ளார். இப்படம் விஜய்க்கு மட்டுமின்றி த்ரிஷாவுக்கும் 67வது படம் ஆகும். இவர்களுடன் சஞ்சய் தத் , அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இந்த நேரத்தில் கமலை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த புத்தகத்தின் ஒரு பக்கத்தில் செம்பன் வினோத் நடித்துள்ள ஜோஸ் கதாபாத்திரம் பேசும் வசனம் இடம் பெற்றுள்ளது. அதில் காஷ்மீருக்கு ஒரு கேஸ் சம்பந்தமாக போயிருந்தப்போ அவன் பழக்கமானான் என அமர் குறித்து வினோத் பேசும் வசனம் இடம் பெற்றுள்ளது. தற்போது விஜய்யின் லியோ படம் காஷ்மீரில் படமாவதால் இதுவும் எல்சியூ-வில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி லோகேஷ் கனகராஜ் படங்கள் குறித்த அடுத்த அப்டேட்டுகள் வெளியாவதால் விஜய்யின் லியோ படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் எகிற தொடங்கி இருக்கிறது.