300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
மாஸ்டர் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் புரமோ வெளியிடப்பட்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக 14 ஆண்டுகளுக்குப் பிறகு த்ரிஷா இணைந்துள்ளார். இப்படம் விஜய்க்கு மட்டுமின்றி த்ரிஷாவுக்கும் 67வது படம் ஆகும். இவர்களுடன் சஞ்சய் தத் , அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இந்த நேரத்தில் கமலை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த புத்தகத்தின் ஒரு பக்கத்தில் செம்பன் வினோத் நடித்துள்ள ஜோஸ் கதாபாத்திரம் பேசும் வசனம் இடம் பெற்றுள்ளது. அதில் காஷ்மீருக்கு ஒரு கேஸ் சம்பந்தமாக போயிருந்தப்போ அவன் பழக்கமானான் என அமர் குறித்து வினோத் பேசும் வசனம் இடம் பெற்றுள்ளது. தற்போது விஜய்யின் லியோ படம் காஷ்மீரில் படமாவதால் இதுவும் எல்சியூ-வில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி லோகேஷ் கனகராஜ் படங்கள் குறித்த அடுத்த அப்டேட்டுகள் வெளியாவதால் விஜய்யின் லியோ படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் எகிற தொடங்கி இருக்கிறது.