மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
மாஸ்டர் படத்தை அடுத்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 67-வது படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் பூஜை சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்ற நிலையில் முதல்கட்ட படிப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. என்றாலும் அது குறித்த தகவல்களை படக்குழு ரகசியமாக வைத்திருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்புதான் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டார்கள்.
அந்த வகையில் விஜய் 67வது படத்தில் அவருடன் சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின், திரிஷா, பிரியா ஆனந்த் உட்பட பலர் நடிப்பதாக அறிவிக்கப்படுகிறது. குறிப்பாக, கே ஜி எப்- 2 படத்தில் வில்லனாக நடித்து பெரிய அளவில் மிரட்டிய பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், விஜய் 67வது படத்திலும் முக்கிய வில்லனாக நடிப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் வில்லனாக நடிப்பதற்கு அவர் 10 கோடி ரூபாய் சம்பளம் பேசியிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்பு நடித்த கே ஜி எப்- 2 படத்தில் நடிப்பதற்கும் இதே 10 கோடி ரூபாய் சம்பளம் அவர் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.