ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் | 'மணி ஹெய்ஸ்ட்' பாதிப்பில் உருவானது கேங்கர்ஸ்: சுந்தர்.சி |
மாஸ்டர் படத்தை அடுத்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 67-வது படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் பூஜை சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்ற நிலையில் முதல்கட்ட படிப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. என்றாலும் அது குறித்த தகவல்களை படக்குழு ரகசியமாக வைத்திருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்புதான் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டார்கள்.
அந்த வகையில் விஜய் 67வது படத்தில் அவருடன் சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின், திரிஷா, பிரியா ஆனந்த் உட்பட பலர் நடிப்பதாக அறிவிக்கப்படுகிறது. குறிப்பாக, கே ஜி எப்- 2 படத்தில் வில்லனாக நடித்து பெரிய அளவில் மிரட்டிய பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், விஜய் 67வது படத்திலும் முக்கிய வில்லனாக நடிப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் வில்லனாக நடிப்பதற்கு அவர் 10 கோடி ரூபாய் சம்பளம் பேசியிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்பு நடித்த கே ஜி எப்- 2 படத்தில் நடிப்பதற்கும் இதே 10 கோடி ரூபாய் சம்பளம் அவர் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.