பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
ஒத்த செருப்பு சைஸ்-7, இரவின் நிழல் படங்களை தொடர்ந்து இந்த ஆண்டு மூன்று படங்களை இயக்கப் போவதாக அறிவித்துள்ள பார்த்திபன், அந்த படங்களின் தலைப்பையும் சமீபத்தில் டுவிட்டரில் அறிவித்திருந்தார். அதோடு சில தினங்களுக்கு முன்பு சென்னை புத்தகக் கண்காட்சியில் சிறைவாசிகளுக்காக புத்தகங்களை மடிப்பிச்சை எடுத்தார்.
இந்த நிலையில் பார்த்திபன் இறந்து விட்டதாக ஒரு யூடியூப் சேனலில் செய்தி வெளியானதை அடுத்து அந்த செய்திக்கு நறுக்கென்று ஒரு பதிலடி கொடுத்துள்ளார் பார்த்திபன். அந்த பதிவில், 'நொடியில் மரணம் அடைவதும் மறுபடியும் அடுத்ததாய் உயிர்த்தெழுவதும் இயற்கை. நடிகன் பற்றிய செய்திகள் இப்படி ஊர்வலம் ஆவதின் காரணம் புரியவில்லை. நெகட்டிவிட்டிஐ பரப்ப இதுபோல் சில நண்பர்கள் இருக்கிறார்கள். மகிழ்ச்சியை மனதில் நிரப்புவோம். மக்களுக்கு பரப்புவோம்' என ஒரு பதிலடி கொடுத்திருக்கிறார் பார்த்திபன்.