'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் | இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் | விமர்சனங்களைக் கண்டு கொள்ளாத சமந்தா | முதல் படத்துக்கு செல்ல பணமில்லை: நண்பனை நினைத்து கண்கலங்கிய இயக்குனர் | இயக்குனராக மிஷ்கின், ஹீரோவாக விஷ்ணுவிஷால், அப்பாவாக விஜயசாரதி, சித்தப்பாவாக கருணாகரன் | பான் இந்தியாவை பிரபலப்படுத்திய 'பாகுபலி' : 10 ஆண்டுகள் நிறைவு | 45 வயதில் நீச்சல் உடை போட்டோசெஷன்: மாளவிகா ஆசை நிறைவேறுமா? | தமிழ் சினிமாவில் 'பெய்டு விமர்சனங்கள்' அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு |
கேரளாவை சேர்ந்த அமலாபால் தமிழ், தெலுங்கில் நடித்து வருகிறார். கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருவைராணிகுளம் மகாதேவர் கோவில் உள்ளது. இந்த கோயிலில் பிற மதத்தினர் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்நிலையில் அமலாபால் இந்த கோயிலுக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை. இதனால் வெளியில் இருந்தபடி சாமி தரிசனம் செய்துள்ளதாக தெரிகிறது. இதுபற்றி தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார் அமலாபால்.
அவர் கூறுகையில், ‛‛திருவைராணி கோயிலுக்கு ஆர்வத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்தேன். ஆனால் சாமியை அருகில் சென்று தரிசனம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. கோயிலுக்கு வெளியே நின்று தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. 2023ம் ஆண்டிலும் மதபாகுபாடு காட்டப்படுவது வருத்தமாக உள்ளது. இந்தநிலை மாறும் என நம்புகிறேன். மதத்தின் அடிப்படையில் இல்லாமல் மக்களை மனிதர்களாக மதிக்கும் காலம் வரும்'' என தெரிவித்துள்ளார்.
‛‛இந்த கோயிலுக்கு ஏராளமானபேர் வருகிறார்கள். மாற்று மதத்தவரும் வருகிறார்கள். அவர்களை பற்றி வெளியே தெரியாததால் பிரச்னை ஏற்படுவது இல்லை. அமலாபால் பிரபலமானவர் என்பதால் அது சர்ச்சையாகி உள்ளது. கோயிலில் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறைப்படியே நடந்துள்ளோம். அதனால் அமலாபாலை அனுமதிக்கவில்லை'' என கோயில் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.