எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஒரேநாளில் நடைபெறும் சம்பவங்களை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு என ஏற்கனவே ரஜினி படங்களில் நடித்தவர்கள் மீண்டும் இடம் பெற்றுள்ளார்கள். அதே சமயம் கன்னட திரை உலகின் முன்னணி நடிகராக இருக்கும் சிவராஜ்குமார் இந்த படத்தில் வில்லனாக முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமல்ல சமீபத்தில் மலையாள நடிகர் மோகன்லால் இந்த படத்தில் ஒரு கெஸ்ட் ரோலிங் நடிப்பதற்காக இணைந்தார். ரஜினியும் இவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் சமீபத்தில் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டன.
இந்த நிலையில் தெலுங்கு திரை உலகை சேர்ந்த நகைச்சுவை நடிகரான சுனில் இந்த படத்தில் இன்னொரு வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இணைந்துள்ளார். ஏற்கனவே புஷ்பா படத்தில் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்து ஆச்சரியப்படுத்திய சுனில், தற்போது இந்த படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடிப்பது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இப்படி ரஜினி நடிக்கும் இந்த ஜெயிலர் படத்தில் மூன்று மொழிகளை சேர்ந்த முக்கிய நடிகர்கள் இடம் பெற்றிருப்பது பான் இந்தியா ரிலீஸாக இந்த படம் வெளியாகும்போது மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.