காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
'வாத்தி' எனப் பெயர் வைத்துவிட்டு தப்பும் தவறுமாய் 'பொங்கள்' வாழ்த்து கூறி ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. தெலுங்கு நிறுவனம் தயாரிக்க, தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார் இசையில் உருவாகியுள்ள படம் 'வாத்தி'. தமிழ் தெலுங்கில் தயாராகியுள்ள இப்படத்தின் இரண்டாவது சிங்கிளான 'நாடோடி மன்னன்' என்ற பாடல் வெளியீட்டு பற்றி நேற்று மாலை படக்குழு ஒரு போஸ்டரை வெளியிட்டது.
அதில், “இனிய பொங்கள் நல்வாழ்த்துக்கள்” என 'பொங்கல்' என்பதற்கு தவறாக 'பொங்கள்' எனக் குறிப்பிட்டுள்ளார்கள். அடிக்கடி தமிழ், தமிழ் எனப் பேசும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் கூட அந்த தவறுதலான போஸ்டரையே அவரது சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துள்ளார். பலரும் அந்தத் தவறை சுட்டிக் காட்டியும் இத்தனை மணி நேரமாக அந்த போஸ்டரை யாரும் திருத்தி மீண்டும் பதிவிடவில்லை.
'வாத்தி' எனப் பெயர் வைத்துவிட்டு இப்படி 'படிக்காத' வாத்தி ஆக இருக்கிறார் இந்த வாத்தி என பலரும் கிண்டலடித்து வருகிறார்கள்.