லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
நடிகர் தனுஷ் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் திரைப்படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் வாத்தி படம் வரும் பிப்ரவரி 17ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த படத்தை அடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து மீண்டும் தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் மூன்றாவது முறையாக தெலுங்கு இயக்குனர் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இந்த படத்தை கிஷோர் ரெட்டி இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே சொந்த ஊரு, டேக் ஓவர், ஸ்ரீகாரம் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்த படத்தை வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளார் என கூறப்படுகிறது.