வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா | 'குபேரா' படத்திற்கு அழுத்தம் கொடுத்த ஓடிடி நிறுவனம் |
1967ம் ஆண்டு, ஜனவரி 6ம் தேதி, சென்னையில் பிறந்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். தன் அப்பா இசை துறையில் இருந்ததால் அவரைப்போலவே தானும் இசையின் மீது நாட்டம் கொண்டு இசை துறைக்கு வந்தார். ஆரம்பகாலத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா போன்ற இசை மேதைகளின் உதவியாளராக பணியாற்றினார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை திறமையை பார்த்து வியந்த இயக்குநர் மணிரத்னம், தனது ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார்.
முதல்படமே சூப்பர் ஹிட்டாக, அனைவரின் பார்வையும் ரஹ்மான் பக்கம் திரும்பியது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இசையமைத்தவர் ஹாலிவுட் படத்திற்கும் இசையமைக்க துவங்கினார். இந்தியாவின் 50வது ஆண்டு சுதந்திர நாளையொட்டி ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்ட 'வந்தே மாதரம்' இசைத் தொகுப்பு இன்றுவரை ஓயவில்லை.
அவர் இசையமைத்த ஸ்லம்டாக் மில்லினியர் படத்திற்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள் கிடைத்த. தமிழ் கலைஞனின் புகழ் உலகம் முழுக்க பரவியது. ஆஸ்கர் விருது மட்டுமல்லாது .கோல்டன் குளோப், கிராமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் குவித்துள்ளார். நான்கு முறை தேசிய விருதுகள், இந்தியாவின் பல்வேறு மாநில விருதுகள், பிலிம்பேர் விருதுகள், பத்மஸ்ரீ போன்ற விருதுகளையும் குவித்துள்ளார். இசையுலகில் இவ்வளவு பெருமையும் சாதனையும் படைத்த ஏ.ஆர்.ரஹ்மான் இன்று 56வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.