கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது | அல்லு அர்ஜுன் - திரிவிக்ரம் சீனிவாஸ் படம் டிராப் ? |
தெலுங்கில் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் பாலகிருஷ்ணா நேரடி சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். இதில் பல முன்னணி நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு பேசி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஜெயசுதா மத்திய அரசு தென்னிந்திய நடிகைகளை புறக்கணிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: கங்கனா ரணாவத்துக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்துள்ளனர். அவர் ஒரு அற்புதமான நடிகை. ஆனாலும் கங்கனா 10 படங்களுக்குள் மட்டுமே நடித்து இந்த விருதை பெற்று இருக்கிறார். ஆனால் என்னை போன்ற பலர் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறோம். ஆனால் நாங்கள் அரசால் அங்கீகரிக்கப்படாமலேயே இருக்கிறோம்.
40 படங்களுக்கு மேல் இயக்கி கின்னஸ் சாதனையில் இடம் பிடித்திருக்கும் இயக்குனர் விஜய நிர்மலாவுக்கு கூட இதுபோன்ற பாராட்டுகள் கிடைக்கவில்லை. தென்னிந்திய நடிகைகளை அரசு அங்கீகரிக்காமல் அரசு புறக்கணித்து வருவது வருத்தமாக இருக்கிறது.
இவ்வாறு ஜெயசுதா கூறியுள்ளார்.
தமிழில் 1970களில் அதிக படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருந்தவர் ஜெயசுதா. தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். மலையாளம், இந்தி, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது குணச்சித்ர வேடங்களில் நடித்து வருகிறார்.