ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர், காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்து வெளியில் வந்தவரை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்டனர். குறிப்பாக விஜய்யின் வாரிசு படம், அவரது அரசியல் பிரவேசம் பற்றி கேட்டனர்.
இதற்கு பதிலளித்து ஷோபா சந்திரசேகர் கூறியதாவது: நான் அம்பாளை தரிசிக்க வந்தேன். நிறைவான தரிசனம் கிடைத்தது, நீண்ட நேரம் அம்பாளை தரிசித்தேன். உலகம் முழுக்க உள்ள மக்கள் மனநிம்மதியுடன், வியாதிகள் எதுவுமின்றி நலமுடன் வாழவேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன்.
விஜய்யின் அடுத்த படம் பற்றி என்னிடம் கேட்கிறீர்கள். அவர் இப்போது நடித்து வரும் வாரிசு படத்தில் என்னவாக நடிக்கிறார் என்பதுகூட எனக்குத் தெரியாது. குடும்ப படம் என்பது மட்டும் தெரியும். விஜய் படம் நல்லா ஓடணும்னு எல்லோரும் பிரார்த்தனை பண்ணுங்க. விஜய் அரசியல் பற்றி எனக்கு ஒண்ணுமே தெரியாது. அது அவர் முடிவெடுப்பது. கடவுள் என்ன நினைக்கிறாரோ அது நடக்கும். அதுக்கு மேல் எனக்கு எதவும் தெரியாது. என்றார்.