ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
சமீபகாலமாக நம்பிக்கை தரும் இளம் நட்சத்திரமாக உருவெடுத்து வருகிறார் நடிகர் அசோக் செல்வன். நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் மலையாளத்தில் வெளியான மரைக்கார் என்கிற வரலாற்று படத்தில் கூட வில்லனாக நடிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் நடித்து வந்த அசோக் செல்வன், சமீப காலமாக நிறைய படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இது குறித்து அவர் கூறும்போது ஒரு படத்தை முடித்துவிட்டு தான் அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் நடித்து வந்தேன். ஆனால் விஜய்சேதுபதி தான் என்னை அழைத்து அப்படி நடிக்க வேண்டாம், ஒரே நேரத்தில் நிறைய படங்களை ஒப்புக்கொண்டு நடிக்க வேண்டும் என்றும் எந்த படம் எப்போது ரிலீஸாகும் என தெரியாததால் ஒரு படத்தை முடித்துவிட்டுதான் அடுத்த படத்தில் நடிக்கலாம் என காத்திருப்பது திரையுலக பயணத்தில் ஒரு முட்டுக்கட்டையாக அமைந்துவிடும் என்று கூறினார். அதைத் தொடர்ந்தே தற்போது பல படங்களில் நடித்து வருகிறேன். அவர் சொன்னதுபோல ஐந்து வருடங்களுக்கு முன்பு வெளியாக வேண்டிய நான் நடித்த வேழம் என்கிற படம் இந்த வருடம் தான் வெளியானது என்று கூறியுள்ளார் அசோக்செல்வன்.