படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி | 160 படங்களைக் கடந்த 2024 ரிலீஸ், 6 படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் | வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? |
முன்னணி நடிகை பாவனா தனது சொந்த வாழ்வில் நடந்த சில சோகமான பிரச்சினைகள் காரணமாக படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு 'என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்நு'. படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் தொடர்பான ஒரு நேர்காணனில் சைபர் க்ரைம் குறித்து அவர் பேசியுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: மீண்டும் சினிமாவில் நடிக்க கூடாது என்றுதான் முடிவு செய்திருந்தேன். சினிமாதான் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தது, என்னிடமிருந்து எல்லாவற்றையும் பறித்தது. மீண்டும் சினிமாவுக்கு வந்தால் மன அமைதி போய்விடும் என்று நினைத்தேன். என் நட்புகள் என்னை மீண்டும் அழைத்து வந்திருக்கின்றன.
எனக்கு எதிராக சைபர் தாக்குதல்கள் அதிகம் நடந்தன. இணையதளம் மூலம் பிறரை மிரட்டுவது, புகழுக்கு களங்கம் ஏற்படுத்துவது இன்று தொழிலாகி விட்டது. வேலைக்கு ஆட்களை அமர்த்தி இதை செய்கிறார்கள். இவரைத் தாக்க வேண்டும். அந்தப் படத்தை மோசமாக விமர்சிக்க வேண்டும் என்று அதற்காகப் பணம் செலவழித்து வருகிறார்கள். எனக்கு தெரிந்தவர்களே, எனக்கு எதிரான வேலைகளைச் செய்தார்கள். எனது கடினமான காலகட்டத்தில் என் முதுகுக்குப் பின்னால் பேசியவர்களை நான் மறந்துவிடவில்லை.
இவ்வாறு பாவனா கூறியுள்ளார்.