மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
‛மாநாடு, வெந்து தணிந்தது காடு' படங்களுக்கு பின் ‛பத்து தல' படத்தில் நடித்துள்ளார் சிம்பு. படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. சிம்பு இன்னும் திருமணம் செய்யாமல் உள்ளார். அவர் வாழ்வில் சில காதல் தோல்விகளும் வந்து சென்றன. தொடர்ந்து சிம்புவிற்கு ஏற்ற மணமகளை தேடி வருவதாக அவரது தந்தை டி.ராஜேந்தர் கூறி வருகிறார்.
இந்நிலையில் காஞ்சிபுரம், வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் டி ராஜேந்தர் சாமி தரிசனம் செய்தார். சிம்புவின் ஜாதகத்தை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‛‛என் மகனுக்கு ஏற்ற மணகளை, எங்கள் வீட்டிற்கு வரப்போகும் குலமகளை நாங்கள் தேர்வு செய்வதை விட இறைவன் தான் தேர்வு செய்து கொடுக்கணும். அதனால் தான் இந்த வழக்கை வழக்கறுத்தீஸ்வரரிடமே ஒப்படைத்துவிட்டேன். கடவுள் அருளால் சிலம்பரசனுக்கு விரைவில் திருமணம் நடக்கும்'' என்றார் டி ராஜேந்தர்.