தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் |
நடிகர் ராஜ்கிரண் தங்கள் மீது பொய் புகார் கொடுத்திருப்பதாக, அவரது வளர்ப்பு மகள் கூறியுள்ளார்.
ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ப்ரியாவுக்கும், சின்னத்திரை நடிகர் முனீஸ்ராஜாவுக்கும், சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. ராஜ்கிரண் எதிர்ப்பை மீறி திருமணம் நடந்தது. இதையடுத்து, 'ப்ரியா என் மகளே அல்ல' என ராஜ்கிரண் கூறினார்.
இதற்கிடையில், ரகசியமாக நடந்த ப்ரியா - முனீஸ்ராஜா திருமண காட்சி, தனியார் 'டிவி' நிகழ்ச்சியில் சேர்க்கப்பட்டுள்ளது. அதை ஒளிபரப்ப, ராஜ்கிரண் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதையும் மீறி நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
அதனால், ராஜ்கிரண் தரப்பில் தங்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுப்பதாகவும், போலீசில் பொய் புகார் கொடுத்துள்ளதாகவும் ப்ரியா குற்றஞ்சாட்டினார். ராஜ்கிரண் மீது புகார் கொடுக்கப் போவதாகவும் ப்ரியா கூறியுள்ளார்.
இந்நிலையில், அவரது கணவர் முனீஸ்ராஜா கூறியுள்ளதாவது: என் மனைவி ப்ரியாவை பெற்ற அப்பா, எங்களுடன் தான் இருக்கிறார். ப்ரியாவை பெற்ற தாயான பத்மஜா என்கிற கதீஜா, 18 ஆண்டுகள் அவருடன் வாழ்ந்தார். பின், கணவரை விட்டு பிரிந்த நிலையில் ராஜ்கிரணுடன் சேர்ந்தார். என் மனைவி சிறு குழந்தையாக இருந்ததால், உடன் அழைத்துச் சென்று விட்டார். அப்போது பத்மஜாவும், ப்ரியாவும் நிறைய நகைகள் போட்டு இருந்தனர். ராஜ்கிரண் தற்போது ப்ரியாவை மகளே இல்லை என கூறி விட்டார். ஆனால், அவரது நகைகளை மட்டும் கேட்கிறார். இது என்ன நியாயம்?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நமது நிருபர் --