இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
'நேரம், பிரேமம்' படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிருத்விராஜ், நயன்தாரா மற்றும் பலர் நடித்து மலையாளத்தில் தயாராகி இன்று வெளியாகியுள்ள படம் 'கோல்டு'. இப்படத்தைத் தமிழிலும் டப்பிங் செய்து இன்று வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். ஆனால், டப்பிங் வேலைகள் தாமதமான காரணத்தால் இன்று படம் வெளியாகாமல் போய்விட்டது.
காலை 8 மணிக்கு மலையாள மொழிக் காட்சிகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவையும் ரத்து செய்யப்பட்டன. காலை 10 மணிக்குதான் முதல் காட்சி ஆரம்பமாகியுள்ளது. மலையாளத்தில் மட்டும் இன்று வெளியாகியுள்ள நிலையில், தமிழில் நாளை வெளியாகும் எனத் தெரிகிறது. ஆன்லைன் டிக்கெட் பதிவு இணையதளங்களில் தமிழ் பதிப்பிற்கான இன்றைய முன்பதிவையும் ரத்து செய்துவிட்டனர்.
இப்படத்தின் தமிழக உரிமையை கோவை சுப்பையா என்ற வினியோகஸ்தர் சுமார் 1 கோடி கொடுத்து வாங்கியுள்ளாராம். சிம்பு நடித்த 'மாநாடு' படத்தின் தமிழக வெளியீட்டை செய்தவர் அவர்தான். இன்று படம் தமிழில் வெளியாகாத நிலையில் மலையாளப் படத்திற்கான விமர்சனம் மற்றும் வரவேற்பைப் பொறுத்தே நாளை வெளியாக உள்ள தமிழ்ப் பதிப்பிற்கான வரவேற்பும் இருக்கும்.