'தக் லைப்' படத்தில் இடம் பெற்ற 'அமானுஷ்யன்' நாவலின் சில பகுதிகள் | 'அகண்டா 2' படத்தில் வில்லனாக ஆதி | காஞ்சனா 4 படத்தின் நிலவரம் என்ன? | மீண்டும் படம் இயக்கி நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்! | சின்னத்திரை நடிகை கண்மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | அதிர்ச்சி கொடுத்த 'தக்லைப்' படத்தின் ஐந்தாவது நாள் வசூல்! | தமன்னா நடிக்கும் 'விவான்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது! | வனிதா விஜயகுமாரின் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்! | தக் லைப் : திட்டமிட்டதற்கு முன்பாகவே ஓடிடி ரிலீஸ்? | 7 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் விஜய் யேசுதாஸ் |
சென்னையில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் சமீபத்தில் சிரித்து வாழ வேண்டும் என்ற படம் டிஜிட்டலில் வெளிவருவதை தியேட்டரில் விழாவாக கொண்டாடினார்கள். இதேபோல மதுரையில் சிவாஜி நடித்த பட்டிக்காடா பட்டணமா படத்தின் 50 வது ஆண்டு விழாவை சிவாஜி ரசிகர்கள் கொண்டாடினார்கள். மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
சிவாஜி மகன் ராம்குமார், மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதி சண்முகையா, நடிகர்கள் ஒய்.ஜி. மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏராளமான ரசிகர்களும் கலந்து கொண்டனர். ரசிகர்கள் குடும்பத்துடன் வந்து படத்தை பார்த்து ரசித்தனர்.
கடந்த 1972ம் ஆண்டு பி.மாதவன் இயக்கத்தில் வெளிவந்த 'பட்டிக்காடா பட்டணமா' படத்தில் சிவாஜி, ஜெயலலிதா மனோரமா, உள்ளிட்ட பலரும் நடித்தனர். மதுரை சோழவந்தானில் படமாக்கப்பட்டது. கிராமப்புற வாழ்க்கையின் மகிமையை நகரத்து நாயகிக்கு நாயகன் புரிய வைப்பதுதான் படத்தின் ஒருவரிக்கதை.