வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
சென்னையில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் சமீபத்தில் சிரித்து வாழ வேண்டும் என்ற படம் டிஜிட்டலில் வெளிவருவதை தியேட்டரில் விழாவாக கொண்டாடினார்கள். இதேபோல மதுரையில் சிவாஜி நடித்த பட்டிக்காடா பட்டணமா படத்தின் 50 வது ஆண்டு விழாவை சிவாஜி ரசிகர்கள் கொண்டாடினார்கள். மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
சிவாஜி மகன் ராம்குமார், மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதி சண்முகையா, நடிகர்கள் ஒய்.ஜி. மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏராளமான ரசிகர்களும் கலந்து கொண்டனர். ரசிகர்கள் குடும்பத்துடன் வந்து படத்தை பார்த்து ரசித்தனர்.
கடந்த 1972ம் ஆண்டு பி.மாதவன் இயக்கத்தில் வெளிவந்த 'பட்டிக்காடா பட்டணமா' படத்தில் சிவாஜி, ஜெயலலிதா மனோரமா, உள்ளிட்ட பலரும் நடித்தனர். மதுரை சோழவந்தானில் படமாக்கப்பட்டது. கிராமப்புற வாழ்க்கையின் மகிமையை நகரத்து நாயகிக்கு நாயகன் புரிய வைப்பதுதான் படத்தின் ஒருவரிக்கதை.