போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் |
தெலுங்கில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான உப்பென்னா என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கிர்த்தி ஷெட்டி. இதைத்தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் அளவிற்கு மளமளவென உயர்ந்து விட்டார். அந்த வகையில் தமிழில் பாலா இயக்கத்தில் சூர்யாவுடன் வணங்கான் படத்திலும், தெலுங்கில் வெங்கட்பிரபு இயக்கத்தில் நாகசைதன்யாவுக்கு ஜோடியாக கஸ்டடி என்கிற படத்திலும், மலையாளத்தில் டொவினோ தாமஸ் ஜோடியாக அஜயண்டே ரெண்டாம் மோசனம் என்கிற படத்திலும் மாறி மாறி நடித்து வருகிறார் கீர்த்தி ஷெட்டி.
வணங்கான் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால், தற்போது வெங்கட்பிரபுவின் டைரக்ஷனில் கஸ்டடி படத்தில் நடித்து வந்தார் கிர்த்தி ஷெட்டி. அந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறைவு பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக டொவினோ தாமஸ் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் தற்போது இணைந்து நடித்து வருகிறார் கீர்த்தி ஷெட்டி. கடந்த அக்டோபர் மாதம் துவங்கப்பட்ட இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ஜித்தின் லால் என்பவர் இயக்கும் இந்தப்படத்தின் கதை 1900, 1950 மற்றும் 1990 என மூன்று விதமான காலகட்டங்களில் நிகழ்வதால் மூன்று விதமான தோற்றங்களில் நடிகர் டொவினோ தாமஸ் நடிக்க உள்ளார். அதற்கு ஏற்ற மாதிரி கிர்த்தி ஷெட்டி தவிர ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் மலையாளத்தில் தேசியவிருது பெற்ற நடிகை சுரபி லட்சுமி ஆகியோரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் நடிகை ரோகிணி, ஹரிஷ் பெராடி ஆகியோரும் நடிக்கின்றனர்.