'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா | 'குபேரா' படத்திற்கு அழுத்தம் கொடுத்த ஓடிடி நிறுவனம் | ராஜமவுலி, மகேஷ்பாபு பட வாய்ப்பைத் தவிர்த்த விக்ரம்? | சாந்தனு ஜோடியாக அஞ்சலி நாயர் | 'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு |
தெலுங்கில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான உப்பென்னா என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கிர்த்தி ஷெட்டி. இதைத்தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் அளவிற்கு மளமளவென உயர்ந்து விட்டார். அந்த வகையில் தமிழில் பாலா இயக்கத்தில் சூர்யாவுடன் வணங்கான் படத்திலும், தெலுங்கில் வெங்கட்பிரபு இயக்கத்தில் நாகசைதன்யாவுக்கு ஜோடியாக கஸ்டடி என்கிற படத்திலும், மலையாளத்தில் டொவினோ தாமஸ் ஜோடியாக அஜயண்டே ரெண்டாம் மோசனம் என்கிற படத்திலும் மாறி மாறி நடித்து வருகிறார் கீர்த்தி ஷெட்டி.
வணங்கான் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால், தற்போது வெங்கட்பிரபுவின் டைரக்ஷனில் கஸ்டடி படத்தில் நடித்து வந்தார் கிர்த்தி ஷெட்டி. அந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறைவு பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக டொவினோ தாமஸ் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் தற்போது இணைந்து நடித்து வருகிறார் கீர்த்தி ஷெட்டி. கடந்த அக்டோபர் மாதம் துவங்கப்பட்ட இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ஜித்தின் லால் என்பவர் இயக்கும் இந்தப்படத்தின் கதை 1900, 1950 மற்றும் 1990 என மூன்று விதமான காலகட்டங்களில் நிகழ்வதால் மூன்று விதமான தோற்றங்களில் நடிகர் டொவினோ தாமஸ் நடிக்க உள்ளார். அதற்கு ஏற்ற மாதிரி கிர்த்தி ஷெட்டி தவிர ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் மலையாளத்தில் தேசியவிருது பெற்ற நடிகை சுரபி லட்சுமி ஆகியோரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் நடிகை ரோகிணி, ஹரிஷ் பெராடி ஆகியோரும் நடிக்கின்றனர்.