ரஜினி 173, கமல் 237, அஜித் 64, தனுஷ் 55 : பொங்கலுக்குள் அறிவிப்புகள் வருமா? | அடுத்தடுத்து மேனேஜர்களை நீக்கிய விஷால், ரவிமோகன் | 100 மில்லியன் கடந்த சிரஞ்சீவி, நயன்தாரா பாடல் | போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! |

தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களின் பங்களிப்பு குறைவாகவே உள்ள நிலையில் மறைந்த எழுத்தாளர் சுஜாதாவுக்கு அடுத்ததாக மிகப்பெரிய அளவில் ஷங்கர், மணிரத்னம் போன்ற இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றவர் எழுத்தாளர் ஜெயமோகன். டூ பாயிண்ட் ஓ, சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன், தற்போது தயாராகி வரும் இந்தியன்-2 ஆகிய படங்களுக்கு கதை, வசனத்தில் தனது பங்களிப்பை கொடுத்த ஜெயமோகன், தற்போது மலையாளத்தில் இளம் நடிகரான ஆசிப் அலி என்பவர் நடிக்கும் புதிய படத்திற்கு கதை எழுதியுள்ளார். சமீபத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற கூமன் என்கிற படத்தின் கதாநாயகனாக நடித்தவர் தான் இந்த ஆசிப் அலி.
ஜெயமோகன் கதை எழுதும் இந்த புதிய படத்தை இயக்குவதன் மூலம் பிரபல மலையாள இயக்குனர் ஷாஜி கைலாஷின் மகன் ஜெகன் ஷாஜி கைலாஷ் இயக்குனராக அறிமுகமாகிறார். இதற்கு முன்னதாக தனது தந்தை இயக்கத்தில் உருவான கடுவா, காபா மற்றும் அலோன் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார் ஜெகன். தனது புதிய படத்திற்கான கதை விவாதத்தின்போது கதாசிரியர் ஜெயமோகன், ஹீரோ ஆசிப் அலியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் இவர் வெளியிட்டுள்ளார்.