ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களின் பங்களிப்பு குறைவாகவே உள்ள நிலையில் மறைந்த எழுத்தாளர் சுஜாதாவுக்கு அடுத்ததாக மிகப்பெரிய அளவில் ஷங்கர், மணிரத்னம் போன்ற இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றவர் எழுத்தாளர் ஜெயமோகன். டூ பாயிண்ட் ஓ, சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன், தற்போது தயாராகி வரும் இந்தியன்-2 ஆகிய படங்களுக்கு கதை, வசனத்தில் தனது பங்களிப்பை கொடுத்த ஜெயமோகன், தற்போது மலையாளத்தில் இளம் நடிகரான ஆசிப் அலி என்பவர் நடிக்கும் புதிய படத்திற்கு கதை எழுதியுள்ளார். சமீபத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற கூமன் என்கிற படத்தின் கதாநாயகனாக நடித்தவர் தான் இந்த ஆசிப் அலி.
ஜெயமோகன் கதை எழுதும் இந்த புதிய படத்தை இயக்குவதன் மூலம் பிரபல மலையாள இயக்குனர் ஷாஜி கைலாஷின் மகன் ஜெகன் ஷாஜி கைலாஷ் இயக்குனராக அறிமுகமாகிறார். இதற்கு முன்னதாக தனது தந்தை இயக்கத்தில் உருவான கடுவா, காபா மற்றும் அலோன் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார் ஜெகன். தனது புதிய படத்திற்கான கதை விவாதத்தின்போது கதாசிரியர் ஜெயமோகன், ஹீரோ ஆசிப் அலியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் இவர் வெளியிட்டுள்ளார்.