ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

மைனா படத்தில் நல்ல போலீசாக நடித்த சேது ஹீரோவாக நடித்துள்ள படம் மையல். இந்த படத்தை பிரபுசாலமன் உதவியாளர் ஏழுமலை இயக்கி உள்ளார். சம்ரிதிதாரா ஹீரோயின். ஒரு கிராமத்து காதல் கதையாக படம் உருவாகி உள்ளது. இந்த படத்துக்கு பிரபல எழுத்தாளரான, பல முன்னணி படங்களில் பணியாற்றிய ஜெயமோகன் கதை வசனம் எழுதியிருக்கிறார். நேற்று வெளியான இந்த படத்துக்கு வெறும் 37 தியேட்டர்கள் மட்டுமே கிடைக்க படக்குழு பெரும் சோகத்தில் இருக்கிறது. முதலில் 75க்கும் அதிகமான தியேட்டர்கள் தருவதாக சொன்னார்கள். கடைசியில் 37 தியேட்டர்தான் கொடுத்து இருக்காங்க. அதிலும் நல்ல காட்சிகள் கிடைக்கவில்லை. ஒரே நேரத்தில் பல படங்கள் ரிலீஸ் ஆனதால் இந்த நிலை என்று படக்குழுவினர் பொங்குகிறார்கள். தமிழில் முன்னணி எழுத்தாளர் எழுதிய கதைக்கே இந்த நிலையா என்று கோலிவுட்டிலும் சலசலப்பு நிலவுகிறது.