கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
இயக்குனர் சேரன் நரிவேட்டை என்ற மலையாள படத்தில் சற்றே வில்லத்தனமான போலீஸ் ஆபீசராக நடித்துள்ளார். டொவினோ தாமஸ் ஹீரோவாக நடித்த அந்த படம் தமிழிலும் டப்பாகி நேற்று வெளியாகி உள்ளது. வயநாட்டில் நில உரிமைக்காக போராடும் பழங்குடி மக்களை அடக்க ஒரு போலீஸ் டீம் செல்கிறது. அதில் அதிகாரியாக இருப்பவர் சேரன். சாதாரண போலீசாக இருப்பவர் டொவினா. அங்கே கலவரம் வெடிக்க என்ன நடக்கிறது என்பது கதை. இத்தனை ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் சற்றே நெகட்டிவ் ரோலில் சேரன் நடித்த படம் இது. எப்படி நடிச்சீங்க என்றால், ‛இஷ்க் என்ற அருமையான படத்தை இயக்கியவர் அனுராஜ் மனோகர், அவரின் அடுத்த படம் இது. என் கேரக்டர் பிடித்து இருந்தது. தவிர, படத்தில் சொல்லப்படும் கரு அழுத்தமானது. அதனால், நரிவேட்டையில் அப்படி நடித்தேன். இயக்குனர்தான் என்னை அந்த ரோலுக்கு தேர்ந்தெடுத்தார். இதே தேதியில் என்னுடைய ஆட்டோகிராப் ரீ ரிலீஸ் ஆக இருந்தது. ஒரே நேரத்தில் 2 போட்டி வேண்டாம் என்று, அந்த பட தேதியை ஒத்தி வைத்துவிட்டேன்' என்கிறார்.