இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
இயக்குனர் சேரன் நரிவேட்டை என்ற மலையாள படத்தில் சற்றே வில்லத்தனமான போலீஸ் ஆபீசராக நடித்துள்ளார். டொவினோ தாமஸ் ஹீரோவாக நடித்த அந்த படம் தமிழிலும் டப்பாகி நேற்று வெளியாகி உள்ளது. வயநாட்டில் நில உரிமைக்காக போராடும் பழங்குடி மக்களை அடக்க ஒரு போலீஸ் டீம் செல்கிறது. அதில் அதிகாரியாக இருப்பவர் சேரன். சாதாரண போலீசாக இருப்பவர் டொவினா. அங்கே கலவரம் வெடிக்க என்ன நடக்கிறது என்பது கதை. இத்தனை ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் சற்றே நெகட்டிவ் ரோலில் சேரன் நடித்த படம் இது. எப்படி நடிச்சீங்க என்றால், ‛இஷ்க் என்ற அருமையான படத்தை இயக்கியவர் அனுராஜ் மனோகர், அவரின் அடுத்த படம் இது. என் கேரக்டர் பிடித்து இருந்தது. தவிர, படத்தில் சொல்லப்படும் கரு அழுத்தமானது. அதனால், நரிவேட்டையில் அப்படி நடித்தேன். இயக்குனர்தான் என்னை அந்த ரோலுக்கு தேர்ந்தெடுத்தார். இதே தேதியில் என்னுடைய ஆட்டோகிராப் ரீ ரிலீஸ் ஆக இருந்தது. ஒரே நேரத்தில் 2 போட்டி வேண்டாம் என்று, அந்த பட தேதியை ஒத்தி வைத்துவிட்டேன்' என்கிறார்.