சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
சென்னையில் நேற்று நடந்த ராஜபுத்திரன் பட விழாவில், அதில் அப்பா கேரக்டரில் நடித்த பிரபு கலந்து கொண்டார். அவருக்கு சற்றே உடல்நலம் சரியில்லை என்றாலும், அதை பொருட்படுத்தாமல் மேடை ஏறியவர், படத்தில் நடித்த, பணியாற்றிய அனைவர் பெயரையும் குறிப்பிட்டு பேசினார். இதுவரை தான் 74 புதுமுக இயக்குனர் படங்களில் நடித்துவிட்டேன். இப்போதும் தொடர்ந்து நடித்து வருகிறேன். இந்த படத்தில் வெற்றி அப்பாவாக வருகிறேன். படத்தில் ஏகப்பட்ட இளைஞர்கள், எனக்கும் அவர்களுடன் பணியாற்ற உற்சாகமாக இருக்கிறது. இதில் ஒரு பாடலுக்கு ஆடமாட்டேன் என்றேன். ஆனாலும் ஆட வைத்துவிட்டார்கள். அந்த குத்து பாடலை அண்ணன் டி.ஆர். பாடியிருக்கிறார். அவருக்கு நன்றி.
நானும் சின்னபசங்க மாதிரி ஆகிவிட்டேன். இன்றைய இயக்குனர்களிடம் நிறைய திறமை இருக்கிறது. இதில் புதுமுக கிருஷ்ணபிரியா ஹீரோயின். அவர் பாடல்கள் அருமை. கதைப்பபடி எனக்கும், அவருக்கும்தான் சண்டை, இந்த படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் நடந்தது. அங்குள்ள கிராமத்து மக்கள் அப்பா, என் மீது, என் மகன் மீது அவ்வளவு பாசமாக இருக்கிறார்கள். இப்போது காலம் மாறிவிட்டது. என்னை வைத்து படம் இயக்கிய ஆர்.வி.உதயகுமார், ஜி.எம்.குமார் ஆகியோருடன் இதில் இணைந்து நடித்து இருக்கிறேன். பல இயக்குனர்கள் காமெடியன், குணசித்திர கேரக்டருக்கு மாறிவிட்டார்கள்'' என்றார்.