கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
சென்னையில் நேற்று நடந்த ராஜபுத்திரன் பட விழாவில், அதில் அப்பா கேரக்டரில் நடித்த பிரபு கலந்து கொண்டார். அவருக்கு சற்றே உடல்நலம் சரியில்லை என்றாலும், அதை பொருட்படுத்தாமல் மேடை ஏறியவர், படத்தில் நடித்த, பணியாற்றிய அனைவர் பெயரையும் குறிப்பிட்டு பேசினார். இதுவரை தான் 74 புதுமுக இயக்குனர் படங்களில் நடித்துவிட்டேன். இப்போதும் தொடர்ந்து நடித்து வருகிறேன். இந்த படத்தில் வெற்றி அப்பாவாக வருகிறேன். படத்தில் ஏகப்பட்ட இளைஞர்கள், எனக்கும் அவர்களுடன் பணியாற்ற உற்சாகமாக இருக்கிறது. இதில் ஒரு பாடலுக்கு ஆடமாட்டேன் என்றேன். ஆனாலும் ஆட வைத்துவிட்டார்கள். அந்த குத்து பாடலை அண்ணன் டி.ஆர். பாடியிருக்கிறார். அவருக்கு நன்றி.
நானும் சின்னபசங்க மாதிரி ஆகிவிட்டேன். இன்றைய இயக்குனர்களிடம் நிறைய திறமை இருக்கிறது. இதில் புதுமுக கிருஷ்ணபிரியா ஹீரோயின். அவர் பாடல்கள் அருமை. கதைப்பபடி எனக்கும், அவருக்கும்தான் சண்டை, இந்த படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் நடந்தது. அங்குள்ள கிராமத்து மக்கள் அப்பா, என் மீது, என் மகன் மீது அவ்வளவு பாசமாக இருக்கிறார்கள். இப்போது காலம் மாறிவிட்டது. என்னை வைத்து படம் இயக்கிய ஆர்.வி.உதயகுமார், ஜி.எம்.குமார் ஆகியோருடன் இதில் இணைந்து நடித்து இருக்கிறேன். பல இயக்குனர்கள் காமெடியன், குணசித்திர கேரக்டருக்கு மாறிவிட்டார்கள்'' என்றார்.