மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
ராதே ஷ்யாம் படத்தை தொடர்ந்து பிரபாஸ் தற்போது சலார், ஆதிபுருஷ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகி வரும் ஆதிபுருஷ் படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் நடித்துள்ளார். தனது ஒவ்வொரு பேட்டியிலும் இந்த படம் குறித்து பேசும்போதெல்லாம் பிரபாஸ் மீதான தனது நெருக்கத்தை வெளிப்படையாகவே கூறி வருகிறார் கிர்த்தி சனோன். இதுகுறித்து சோசியல் மீடியாவில் பல வீடியோக்கள் வெளியாகி உள்ளன.
குறிப்பாக சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், வாய்ப்பு கிடைத்தால் பிரபாஸை தான் திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். இன்னும் ஒரு பேட்டியில், “ஆதிபுருஷ் படப்பிடிப்பின்போது பிரபாஸ் எனக்கு தெலுங்கு டீச்சராக இருந்து தெலுங்கு கற்றுக் கொடுத்தார்.. அவருக்கு நான் ஹிந்தி கற்றுக் கொடுத்தேன்” என்றும் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்ல ஹிந்தியில் கிர்த்தி சனோனுடன் படம் ஒன்றில் இணைந்து நடித்துள்ள வருண் தவான் ஒரு பேட்டியில் கூறும்போது, கிர்த்தி சனோன் வாழ்க்கையில் சமீபகாலமாக ஒரு உயரமான இளவரசன் நுழைந்துள்ளார் என கூறியுள்ளார். அந்த இளவரசன் பிரபாஸ் தான் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது பிரபாஸ் குறித்து கிர்த்தி சனோன் சீரியசாக தான் பேசி வருகிறாரோ என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். நட்பாகத்தான் பழகி வருகிறோம் என கூறி வருவதால் பிரபாஸின் வாழ்க்கையில் அனுஷ்காவிற்கு இடமில்லை என்கிறபோது அந்த வெற்றிடத்தை கிர்த்தி சனோனாவது நிரப்புவாரா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.