புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் சூரி. தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நிலம் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், முன்னாள் டிஜிபியுமான ரமேஷ் குடுவாலா மீது புகார் கொடுத்தார் சூரி. இதுதொடர்பான வழக்கு விசாரணை நடக்கிறது. இந்த வழக்கில் நான்காவது முறையாக ஆஜராகி விளக்கம் அளித்தார் சூரி.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சூரி, ‛‛பலமுறை விசாரணைக்கு வந்துள்ளேன், திருப்பி திருப்பி விசாரிக்கிறார்கள். போலீஸ், நீதி துறை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நிச்சயம் நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன். முன்பெல்லாம் வீட்டை விட்டு வெளியே கிளம்பினால் எங்கப்பா சூட்டிங் என எனது பிள்ளைகள் கேட்பார்கள். இப்போது போலீஸ் ஸ்டேஷனுக்கு போறீங்களானு கேக்குறாங்க. கனவில் கூட போலீஸ் ஸ்டேஷன் தான் வருகிறது'' என்றார்.