'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் | இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் | விமர்சனங்களைக் கண்டு கொள்ளாத சமந்தா | முதல் படத்துக்கு செல்ல பணமில்லை: நண்பனை நினைத்து கண்கலங்கிய இயக்குனர் | இயக்குனராக மிஷ்கின், ஹீரோவாக விஷ்ணுவிஷால், அப்பாவாக விஜயசாரதி, சித்தப்பாவாக கருணாகரன் | பான் இந்தியாவை பிரபலப்படுத்திய 'பாகுபலி' : 10 ஆண்டுகள் நிறைவு | 45 வயதில் நீச்சல் உடை போட்டோசெஷன்: மாளவிகா ஆசை நிறைவேறுமா? | தமிழ் சினிமாவில் 'பெய்டு விமர்சனங்கள்' அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு |
தெலுங்குத் திரையுலகத்தின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டவர் மறைந்த நடிகர் கிருஷ்ணா. தெலுங்கில் 350 படங்களுக்கும் மேல் நடித்தவர். கடந்த வாரம் உடல்நலக் குறைவு காரணமாக மரணம் அடைந்தார். அவரது மகனும், முன்னணி தெலுங்கு நடிகருமான மகேஷ்பாபு அப்பாவுக்காக ஒரு நினைவாலயம் கட்டும் முடிவில் இருக்கிறாராம்.
அவர்களது குடும்பத்தினருக்குச் சொந்தமான பத்மாலயா ஸ்டுடியோ ஐதராபாத்தில் உள்ளது. அந்த இடத்தில் கிருஷ்ணாவுக்காக ஒரு நினைவாலயம் கட்டி, அதில் அவரது உருவச் சிலை, அவர் வாங்கிய விருதுகள், அவரது படங்கள் பற்றிய தகவல்கள், புகைப்படங்கள் என அனைத்தும் இடம் பெறும் வகையில் உருவாக்கப் போகிறாராம். தெலுங்கு நடிகர் ஒருவருக்கு இதுவரையிலும் யாரும் இப்படி ஒரு நினைவாலயம் அமைத்ததில்லை என்று சொல்லுமளவிற்கு அது இருக்க வேண்டும் என்பது மகேஷ்பாவுன் திட்டம் என்கிறார்கள். விரைவில் இது பற்றிய அறிவிப்பு வரலாம் என்பது டோலிவுட் தகவல்.