புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
ராஜமவுலி இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பாகுபலி திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகி இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. அதேசமயம் அந்த படம் அதிக நேரம் ஓடும் விதமாக எடுக்கப்பட்டிருந்ததால் படத்தின் நீளம் கருதி இரண்டு பாகங்களாக வெளியிடப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் கதை அந்தப்படத்துடன் முடிவடைந்துவிட்டது. இருந்தாலும் இந்த படத்திற்கு இரண்டாம் பாகம் எப்போது என பல நிகழ்வுகளில் இயக்குனர் ராஜமவுலியிடம் கேட்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் கூட ராஜமவுலி கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் இதுபற்றி அவரிடம் கேட்கப்பட்டபோது, இதைப்பற்றி என்னால் இப்போது எந்த தகவலும் சொல்ல முடியாது. என்னைவிட இந்த படத்தின் கதாசிரியரான எனது தந்தை விஜயேந்திர பிரசாத் சொன்னால் தான் சரியாக இருக்கும். அவர் தான் தற்போது அதற்கான வேலையில் ஈடுபட்டிருக்கிறார் என்று பதிலளித்தார்.
இந்த நிலையில் தற்போது கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் ஒரு வழியாக இந்த இரண்டாம் பாகத்திற்கான கதைக்களத்தை பிடித்து விட்டோம் என்று கூறியுள்ளதாக ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது.. அந்தவகையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது என்கிற தகவலுடன் விரைவில் அது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கலாம்.