லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
மலையாளத் திரையுலகில் குறுகிய காலகட்டத்திலேயே வித்தியாசமான கதைக்களங்களில், வித்தியாசமான மனிதர்களின் வாழ்க்கை முறைகளை படமாக எடுத்து ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி. இவர் இயக்கிய அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்கட்டு ஆகிய படங்கள் தமிழ் ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் இவர் தற்போது மம்முட்டி நடிப்பில் நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் வரும் டிசம்பர் 16ஆம் தேதி இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் மலையாளத்தில் வெளியாகும் அதே சமயத்தில் தமிழிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தப் படம் முழுவதுமே தமிழ்நாட்டின் எல்லையோர பகுதிகளில் நடைபெறும் நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாகியுள்ளதுடன் முக்கால்வாசி படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.