புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
மலையாளத் திரையுலகில் குறுகிய காலகட்டத்திலேயே வித்தியாசமான கதைக்களங்களில், வித்தியாசமான மனிதர்களின் வாழ்க்கை முறைகளை படமாக எடுத்து ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி. இவர் இயக்கிய அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்கட்டு ஆகிய படங்கள் தமிழ் ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் இவர் தற்போது மம்முட்டி நடிப்பில் நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் வரும் டிசம்பர் 16ஆம் தேதி இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் மலையாளத்தில் வெளியாகும் அதே சமயத்தில் தமிழிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தப் படம் முழுவதுமே தமிழ்நாட்டின் எல்லையோர பகுதிகளில் நடைபெறும் நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாகியுள்ளதுடன் முக்கால்வாசி படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.