ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி | தேங்கி கிடந்த 'சுமோ' ஏப்., 25ம் தேதி திரைக்கு வருகிறார் | பெல்ஜியம் கார் ரேஸ் : இரண்டாம் இடம் பிடித்த அஜித் அணி |
பொன்னியின் செல்வனுக்கு முன், பொன்னியின் செல்வனுக்கு பின் என திரிஷாவின் திரையுலக பயணத்தை இரண்டாக பிரிக்கும் அளவுக்கு பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றியும், அதில் அவர் ஏற்று நடித்த குந்தவை கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பும் அவரது அடுத்த இன்னிங்ஸை மீண்டும் பரபரப்பாக துவங்கி வைத்துள்ளது. அந்த வகையில் பல வருடங்கள் கழித்து அடுத்து மீண்டும் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்தநிலையில் புதிய முயற்சியாக வெப் சீரிஸிலும் காலடி எடுத்து வைத்துள்ளார் திரிஷா. இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகி வரும் பிருந்தா என்கிற வெப் சீரிஸில் நடித்துள்ள திரிஷா, இதில் முதன்முறையாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் சூர்யா வங்கலா என்பவர் இந்த வெப்சீரிஸை இயக்கியுள்ளார்.
தெலுங்கில் தயாராகும் இந்த வெப்சீரிஸ் பின்னர் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளில் டப் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் இந்த வெப்சீரிஸ் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ள திரிஷா இதன் முதல் பாகம் 'ஆன் தி வெ' என்றும் கூறியுள்ளார்..