மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் இயக்கத்தில் திரைப்படமாக உருவாகி, அதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து விட்டது. இங்கே இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகமெங்கும் உள்ள தமிழ் ரசிகர்கள் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பை வழங்கியுள்ளனர். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா மற்றும் வானதி கதாபாத்திரத்தில் நடித்த சோபிதா துலிபாலா ஆகியோர் சமீபத்தில் ஒன்று கூடி மீண்டும் தங்களது படப்பிடிப்பு கொண்டாட்டங்களை மீட்டெடுத்துள்ளனர்.
இதுகுறித்த இரண்டு புகைப்படங்களை சோபிதா துலிபாலா தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் ஒரு புகைப்படத்தில் இந்த அனைவரின் முகங்கள் குளோசப்பிலும் இன்னொரு புகைப்படத்தில் இவர்கள் ஐந்து பேரின் ஒற்றை பாதங்கள் குளோசப்பிலும் இடம் பெற்றுள்ளன. இந்த படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் பலரும் இந்த நிகழ்வில் எங்கே நந்தினியை காணவில்லை என்று ஐஸ்வர்யா ராய் பற்றியே தங்களது கமெண்டுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.