அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் |

தொடர்ந்து விஜய்யை வைத்து மூன்று படங்களை இயக்கிவிட்டு அதன் பலனை அறுவடை செய்யும் விதமாக தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் என்கிற படத்தை இயக்கி வருகிறார் அட்லீ. பொதுவாகவே அவரது முதல் படமான ராஜா ராணியில் இருந்து கடைசியாக இயக்கிய பிகில் வரை பெரும்பாலும் கதை திருட்டு என்கிற சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்தநிலையில் அவர் பாலிவுட்டில் இயக்கி வரும் ஜவான் படம் எனது தயாரிப்பில் உருவான விஜயகாந்த் நடித்த பேரரசு படத்தின் கதையை தழுவி தான் உருவாகிறது என அதன் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து இருதரப்பினரையும் அழைத்து விசாரித்த தயாரிப்பாளர் சங்கம், மாணிக்கம் நாராயணனிடம் அவர் சொல்லும் புகாருக்கு, அவர் வைத்துள்ள ஆதாரங்களை கொண்டுவந்து சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளது. அதனை பரிசீலித்த பின்னரே ஜவான் படத்தின் கதை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
அதேசமயம் ஜவான் படத்திற்கும் பேரரசு படத்திற்கும் படத்தின் ஹீரோ இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் என்பது மட்டுமே ஒற்றுமை என்றும், பேரரசு படத்தில் விஜயகாந்த் போலீஸ் அதிகாரி மற்றும் ஆக்ரோச இளைஞர் என்கிற கதாபாத்திரங்களில்ல் நடித்திருந்தார். இந்த ஜவான் படத்தில் ஷாருக்கான் ராணுவ அதிகாரியாக நடித்து வருகிறார் என்பதால் இரண்டு படத்திற்கும் கதையில் ஒற்றுமை இருக்க வாய்ப்பு இல்லை என்றும் திரையுலக வட்டாரத்தில் பேசிக்கொள்ளப்படுகிறது.