விஜய் சேதுபதி படத்தில் கன்னட நடிகர் துனியா விஜய் | பத்மபூஷன் விருது நாளில், விஜய் ரசிகர்கள் மீது அஜித் ரசிகர்கள் கோபம் | சர்வானந்த் ஜோடியாக இரண்டு இளம் நாயகிகள் | சமந்தா தயாரித்த சுபம் படம் மே 9ல் ரிலீஸ் | சர்ச்சையான பஹல்காம் தாக்குதல் அறிக்கை : விளக்கம் கொடுத்த விஜய் ஆண்டனி | ''எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் லாலேட்டா'' ; வெளிப்படையாகவே கோரிக்கை வைத்த '2018' பட இயக்குனர் | சிம்புவுக்கு ஜோடியாகும் கயாடு லோகர் | இரண்டாம் ராணி எலிசெபத்திற்கு பிறகு ராம்சரணுக்கு செல்லப்பிராணியால் கிடைத்த பெருமை | பத்மபூஷன் விருது : குடும்பத்துடன் டில்லியில் அஜித் | 'தொடரும்' பட போஸ்டர் மூலம் ஹெல்மெட் விழிப்புணர்வு ; போலீஸுக்கே பூமராங் ஆக திரும்பிய கருத்துக்கள் |
சமந்தா நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சோசியல் திரில்லராக வெளியான யசோதா திரைப்படம் விமர்சன ரீதியாகவும், ஓரளவு வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் சமந்தா ரிஸ்க் எடுத்து சண்டை காட்சிகளில் நடித்துள்ளார். அதற்கேற்ற பாராட்டுக்கள் அவருக்கு தற்போது குவிந்து வருகின்றது.
இந்த நிலையில் யசோதா படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தனது இடுப்பை சுற்றி மேக்கப் சாதனங்கள் அடங்கிய பை ஒன்றை கட்டிக்கொண்டு அங்கிருந்த பெண் ஒருவருக்கு மேக்கப் போடுவது போன்று சமந்தா ஜாலியாக குறும்புத்தனம் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை யசோதா படத்தில் சமந்தாவின் ஒப்பனைக் கலைஞராக பணியாற்றிய பாலிவுட்டை சேர்ந்த ரோகித் பட்கர் என்பவர் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் படப்பிடிப்பில் சமந்தாவுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து அவர் கூறும்போது, “இந்த படத்தில் பணியாற்ற எனக்கு அழைப்பு வந்தபோது கொஞ்சம் டென்ஷன் ஆக இருந்தது. சமந்தாவுடன் இணைந்து பணியாற்றுவது ஒருவேளை எந்த கலாட்டாக்களும் இல்லாமல் சீரியஸாக இருக்குமா ? இல்லை நேரத்துக்கு வந்தோம் போனோம் என வேலை பார்க்கும் விதமாக இருக்குமா ? என்னுடைய வேலைபார்க்கும் பாணியில் நான் சமரசம் செய்துகொள்ள வேண்டி வருமா ? என பல எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தன.
எல்லாம் அந்த அற்புத பெண்ணை சந்திக்கும் வரை தான்.. அதன்பிறகு படப்பிடிப்பு தளத்தில் அவருடன் எனக்கு நிகழ்ந்தது எல்லாமே மறக்க முடியாத ஜாலியான அனுபவங்கள் தான். தன்னுடன் பணிபுரியும் ஒவ்வொருவரையும் அவர் அவ்வளவு அழகாக கவனித்துக்கொண்டு எப்போதும் கலகலப்பாகவே வைத்திருந்தார். அவருக்குள் இருந்த ஒரு நிஜமான ஹீரோவை, ஒரு நிஜ சூப்பர்ஸ்டாரை, ஒரு நிஜ மனிதனை, ஒரு நிஜ நண்பனை நான் ஒவ்வொரு நாளும் உணர்ந்தேன்” என்று நிகழ்ந்து பாராட்டியுள்ளார்.