அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் |

ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் செப்டம்பர் மாதம் 30ம் தேதி வெளியான கன்னடத் திரைப்படம் 'காந்தாரா'. யாரும் எதிர்பார்க்காத விதத்தில் இந்தப் படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று இந்தியா முழுவதும் அதிக வசூலைக் குவித்துள்ளது.
கன்னடத்தில் படம் வெளியான இரண்டு வாரங்களுக்குப் பிறகுதான் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் மூன்று வாரங்களுக்குப் பிறகு மலையாள மொழியிலும் வெளிவந்தது. 350 கோடி வசூலைக் கடந்துள்ள இந்தப் படம் ஹிந்தியில் மட்டுமே சுமார் 75 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்துள்ளது. கர்நாடகாவில் 175 கோடி, தெலுங்கு மாநிலங்களில் 50 கோடி வசூலையும், வெளிநாடுகளில் 25 கோடி வசூலையும் கடந்துள்ளது. தமிழ், மலையாளத்தில் 20 கோடி வசூலை மட்டுமே பெற்றுள்ளது. அனைத்து மொழிகளிலும் தற்போதும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் படத்தை கர்நாடகாவில் தென் பகுதிகளில் பேசப்படும் 'துளு' மொழியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடகாவின் தெற்குப் பகுதி, உடுப்பி ஆகிய இடங்களில் இம்மொழி பேசப்பட்டு வருகிறது. 'காந்தாரா' படத்தில் இடம் பெற்றுள்ள 'பஞ்சுருலி தெய்வம்' துளு மொழியில் பேசுவதாகத்தான் படத்திலும் குறிப்பிட்டிருந்தனர். உடுப்பி சார்ந்த மலைப் பிரதேசத்தில்தான் படத்தின் கதைக்களமும் அமைக்கப்பட்டிருந்தது. அம்மலைவாழ் மக்களின் வாழ்வியல் கதைதான் 'காந்தாரா'.