பத்ம பூஷன் விருது பெற்றார் அஜித் | மூன்றாவது முறையாக சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் நயன்தாரா? | மூன்றாவது தெலுங்குப் படத்தை முடித்த 'திருடன் போலீஸ்' இயக்குனர் | விஜய் சேதுபதி படத்தில் கன்னட நடிகர் துனியா விஜய் | பத்மபூஷன் விருது நாளில், விஜய் ரசிகர்கள் மீது அஜித் ரசிகர்கள் கோபம் | சர்வானந்த் ஜோடியாக இரண்டு இளம் நாயகிகள் | சமந்தா தயாரித்த சுபம் படம் மே 9ல் ரிலீஸ் | சர்ச்சையான பஹல்காம் தாக்குதல் அறிக்கை : விளக்கம் கொடுத்த விஜய் ஆண்டனி | ''எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் லாலேட்டா'' ; வெளிப்படையாகவே கோரிக்கை வைத்த '2018' பட இயக்குனர் | சிம்புவுக்கு ஜோடியாகும் கயாடு லோகர் |
மலையாள திரையுலகில் பிரபல இசையமைப்பாளராக இருப்பவர் கோபி சுந்தர். தமிழில் தோழா, பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோபி சுந்தர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பின்னணி பாடகி அம்ரிதா சுரேஷுடன் அதாவது நடிகர் பாலாவின் முன்னாள் மனைவியுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தநிலையில் தற்போது ஒரே சமயத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் 12 படங்களுக்கு இசையமைத்து வருவதாக கூறியுள்ளார் கோபி சுந்தர். ஆனால் இதில் ஒன்று கூட மலையாள படம் இல்லை.
சமீபத்தில் ரசிகர் ஒருவர் நீங்கள் ஏன் மலையாள படத்தில் இசை அமைப்பதில்லை என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த கோபி சுந்தர், “உங்களுக்கு நீங்கள் வாங்கும் சம்பளத்தை விட சிறப்பான சம்பளம் கொடுப்பதாக கூறி இன்னொரு இடத்திற்கு அழைத்தால் நீங்கள் என்ன முடிவு எடுப்பீர்கள் சகோதரரே..? அதைத்தான் நானும் எடுத்துள்ளேன்" என்று கூறியுள்ளார்.
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா ஜோடிக்கு மிகப்பெரிய புகழை கொடுத்த கீதா கோவிந்தம் படத்திற்கு இசையமைத்தது இவர்தான்.. ஆனாலும் சம்பளம் காரணமாக மலையாள திரையுலகை விட்டு ஒதுங்கியுள்ளதாக இவர் கூறியது ரசிகர்களிடம் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.